Saturday, June 20, 2009

அன்பு தந்தையே...



அன்பு தந்தையே...


எந்நாளும் எங்கள்
வளர்ச்சியையே
எண்ணும் உங்கள்
சிந்தையே...


உங்களாலே இன்று
உற்சாகமாக உதைத்து
ஆடுகிறோம்
வாழ்க்கை பந்தையே...


நீங்கள் 
ஏணியாய் இருந்து
எங்களை ஏற்றம்
காண செய்தீர்கள்...


நல்ல மாற்றம்
பல காண செய்தீர்கள்...


எத்தனை வயதானாலும்
குழந்தைகள் தான்
நாங்கள்
உங்களுக்கு...


எப்போதும் வேண்டும்
உங்கள் அன்பெனும்
ஆலமர நிழல்
எங்களுக்கு...

4 comments:

ஆயில்யன் said...

//ஏணியாய் இருந்துஎங்களை ஏற்றம்காண செய்தீர்கள் நல்ல மாற்றம் பல காண செய்தீர்கள் ///

கலர் கலராய் நினைவுகள் !

தந்தையின் கனவுகள் நிறைவேற்றிய களிப்பு !

தந்தையர் தின வாழ்த்துக்கள் :))

sarathy said...

நன்றி ராஜா உங்களின் கனிவான ஆறுதலுக்கு..

கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்பு தந்தையே

எந்நாளும் எங்கள்
வளர்ச்சியையே

எண்ணும் உங்கள்
சிந்தையே

அருமையான வரிகள் ...


நன்றி துபாய் ராஜா

தந்தையர் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

super thalaivaa...