Friday, October 02, 2009

ஏதோ மோகம் - பாகம் 6


ஸ்டேசன் சைக்கிள் ஸ்டாண்ட் அருகே இறங்கியவள் உள்ளே ஆண்களாக இருந்ததால் தயங்கி வெளியிலே நின்றாள். நான் வண்டியை விட்டு இறங்கி "எந்த சைக்கிள் சொல்லுங்க நான் எடுத்துட்டு வர்றேன்" என்று கூறி அவள் அடையாளம் காட்ட பூட்டியிருந்ததாலும், லேடிஸ் சைக்கிள் கனம் மிகவும் குறைவு என்பதாலும் அப்படியே அலேக்காக தூக்கி வந்தேன்.


அசாத்தியமாக அவளது சைக்கிளை தூக்கி வரும் என்னை வியப்போடு பார்த்து கொண்டிருந்தவள் “அப்ப காலைல சரியா எத்தனை மணிக்கு வருவீங்க சொல்லுங்க?” என்று கேட்டாள். ”நமக்கு 9 மணிக்குதானே கிளாஸ் ஆரம்பிக்குது, காலைல 8.30 மணி வாக்குல நாம இங்கிருந்து கெளம்புனா சரியா இருக்கும். நாளைக்கு வெள்ளிக்கிழமை நான் வழக்கமா காரணீஸ்வரர் கோயிலுக்கு போவேன்.” என்றவனை இடைமறித்து அப்ப நானும் சரியா 8.30 மணிக்கு காரணீஸ்வரர் கோயிலுக்கே வந்திடுறேன்” என்று கூறி விடைபெற்று சென்றாள்.



”சரி பார்ட்டி, உஷார் பார்ட்டிதான். வீட்டுக்குப் போனா அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க ஏதாவது நினைப்பாங்கன்னுதான் கோயிலுக்கே வந்த்திடுறேன்ன்னு சொல்லிட்டா” என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.


மறுநாள் காலை குளித்து சாப்பிட்டு கிளம்பி கோயிலுக்கு சென்றேன். தரிசனம் முடித்து வெளியே வரும்போது அவள் பைக் அருகே நின்றுகொண்டிருந்தாள். “லேட்டாயிடுச்சின்னா விட்டுட்டு போயிடுவீங்கன்னு சீக்கிரமே கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுட்டு உங்க பைக்கு கிட்ட வந்து நின்னுகிட்டேன்.” என்று சிரித்தவாறு கூறினாள். அங்கிருந்து கிளம்பி பயிற்சி அரங்கம் வந்து சேர மணி 8.50 ஆகிவிட்டது. அவள் என்னுடன் பைக்கில் வந்து இறங்குவதை மற்ற நிறுவனங்களை சேர்ந்த சில நண்பர்கள் வியப்போடு பார்த்த மாதிரி இருந்தது.


பயிற்சிகள் சரியான நேரத்திற்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.தேநீர் இடைவேளை மற்றும் உணவு இடைவேளைகளில் என்னுடனே இருந்தாள். சேகரும் உடன் இருக்குமாறு பார்த்து கொண்டாள். அவள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூட “என்ன ராதா, அவங்க கம்பெனியிலே போய் சேர்ந்திடுவே போல இருக்கு” என்று அடிக்கடி அவளை கிண்டலடித்து கொண்டிருந்தனர்.


அன்று மாலை திரும்பும்போது என்னைப் பற்றியும்,குடுமபத்தினர்,நண்பர்கள் பற்றி ஏதேதோ கேட்டு கொண்டே வந்தாள்.”அம்மாட்ட நேற்று உங்களை பற்றி சொன்னேன்.நாளை காலை எங்க வீட்டுக்கு சாப்பிட வரச்சொன்னாங்க” என்றாள்.நான் என்ன பதில் சொல்ல என யோசித்து கொண்டிருக்கும்போதே “ஏன் இவ்வளவு யோசனை,சரியா காலைல எட்டு மணிக்கு வீட்டுக்கு வர்றீங்க.சாப்பிட்டு கெளம்ப சரியா இருக்கும்” என்று கண்டிப்பான குரலில் கூறினாள்.”அப்புறம் இன்னொண்ணு நான் உங்களை விட நாலைந்து வயது சின்னப்பொண்ணு தான்,அதனால இந்த வாங்க,போங்க எல்லாம் விட்டுட்டு சும்மா பேர் சொல்லியே வா,போன்னு கூப்பிடுங்க” என்றாள். “சரிங்க” என்றவன் அவள் “ம்ம்ம்” என முறைக்கவும் “சரி.சரி” என்றேன்.


இன்னைக்கு நேரா எங்க வீட்டுக்கிட்டே போங்க” என்று வழி கூறியவாறு வந்தாள். அவள் வீடு மாந்தோப்பு பள்ளியினருகே இருந்தது. எனது அறையிலிருந்து மிகப்பக்கம்தான். ”அப்ப நாளைக்கு காலையில சரியா 8 மணிக்கு வர்றீங்க” என்றவாறே விடைபெற்று சென்றாள்.


( தொடரும் )


4 comments:

vasu balaji said...

ம்ம்ம். வேகம் புடிக்குது.

லோகு said...

இந்த பாகம் தான் ரொம்ப அருமை.. அப்புறம் என்ன ஆச்சு??

பிரபாகர் said...

நல்லா சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி.... ம்... கலக்குங்க, கலக்குங்க.

பிரபாகர்.

ஹேமா said...

இப்போதான் 3- 4- 5 வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.